ஆனந்த லஹரி - 33 & 34



ஸ்மரம் யோனீம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதெள தவமனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னெள ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:

அம்பிகே!, புண்யவான்களாகிய யோகிகள், தமது கைகளில் தாமரை மணிமாலையைக் கையில் கொண்டு, முறையே காம, யோனி, மற்றும் லக்ஷ்மி பீஜாக்ஷரங்களை முன்னர் சொன்ன15 அக்ஷரங்களுடன் சேர்த்து த்ரிகோணாகாரமாகிய சிதக்னியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னை திருப்தி செய்விக்கிறார்கள்.

பஞ்சதசீ என்னும் மந்திரம் பற்றி 32ஆம் ஸ்லோகத்தில் பார்த்தோம். பஞ்சதசீயில் வரும் அக்ஷரங்களுக்கான தேவதைகள் என்னென்ன என்று அங்கு பார்த்தோம். அவற்றுடன் காம, யோனி, மற்றும் லக்ஷ்மி அக்ஷரங்களை இணைத்து இங்கு சொல்கிறார். இவ்வாறாக இந்த மூன்றும் இணைத்தபின் வருவதை செளபாக்ய பஞ்சதசீ என்பர். அந்த மந்த்ரம் இங்கே மறைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தையே கைவல்யர் காதி வித்தை என்றும் முந்தைய ஸ்லோகத்தை ஹாதி வித்தை என்றும் கூறுகிறார்.

நிரவதி மஹாபோக-ரஸிகா - இடைவிடாது மந்திர ஜபம் செய்து ரசிக்கிறவர்கள்; ஏகே - சிலர்; சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா: - தொடர்ந்து சிந்தனையையே ஜபமாலையாக கொண்டு; சிவாக்னெள - சிவாக்னி எனப்படும் முக்கோண ஹோம-குண்டத்தில்; ஸுரபிக்ருத-தாரா - காமதேனு அளித்த நெய் தாரையை; ஆஹுதி - (அக்னிக்கு) அளித்தல்; ஜுஹ்வந்த: - செய்பவர்களாக; பஜந்தி - ஆராதித்தல்

வீட்டில் செய்யப்படும் ஹோமங்கள் சதுரமான குண்டத்தில் செய்யப்பட்டாலும், கோவில்களில் பல ரூபங்களில் ஹோம குண்டங்கள் அமைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு ரூபத்தில் ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் சிவனுக்கானது முக்கோண அமைப்பில் இருக்கும். இங்கே சிவோஹம் என்று பாவனையாக சிதக்னியில் ஹோமம் செய்ய வேண்டும் என்கிறார்.


சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:

பராம்பிகே!, சந்திர-சூரியர்களை நிகில்களாக கொண்ட நீ பரமசிவனுக்கு உடலாகவும், மாசற்ற ஒன்பது வ்யூக ஸ்வரூபியான சிவனது உடலானது உன்னுடையதாகவும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகவே உடமை, உடையவர் என்ற பாகுபாடில்லாது உங்களது உறவு ஸமநிலையில், சேஷ-சேஷி பாவமாக (ஒருவர் சரீரமாகவும், இன்னொருவர் ஆன்மாவாகவும்) இருப்பது ஒப்புயர்வற்ற ஸச்சிதானந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.

ஸமரஸ பரானந்த பரயோ - சிவனும் சக்தியும் சமமாக இருப்பதால் சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயருண்டு. நாம் சாதாரணமாக சிவ-சிவா என்று சொல்லும் போது முதலில் வரும் சிவ என்பது ஈசனையும் இரண்டாவதாக வரும் சிவா: அம்பிகையையும் குறிக்கும் என்பர். 32, 33 ஆகிய ஸ்லோகங்களில் மறைந்திருக்கும் மந்திரத்தின் ரிஷி ஈசன், அதனால் தான் இங்கே சம்போ என்று கூறி அவரை தியானிக்கும்படி அமைக்கப்படிருக்கிறதாக லக்ஷ்மிதரர் சொல்கிறார்.


சசி-மிஹிர - சந்திர-சூர்யர்களை; வக்ஷோருஹ-யுகம் - நிகில்களாக கொண்ட; த்வம் - நீ; சரீரம் - உடல்; சம்போ - பரமசிவன்; நவாத்மானம் - (காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன்) ஆகிய 9 விதமான வியூஹங்களை உடையவன். மன்யே - மனக்கண்; அத: -ஆகையால்; உபய ஸாதரணதயா - இருவருக்கும் ஸமமான; ஸ்தித: - நிலை பெற்ற;

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

செளபாக்ய பஞ்சதசீ, மற்றும் ஹோமங்கள் பற்றிச் சொன்ன நல்ல பதிவு! நன்றி மெளலி அண்ணா!

Geetha Sambasivam said...

உள்ளேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

உள்ளேனுக்கு அடியான் வணக்கம்.

குமரன் (Kumaran) said...

உள்ளேனுக்கு அடியானுக்கு அடியான் வணக்கம். :-)