Showing posts with label Veerai kavirajar. Show all posts
Showing posts with label Veerai kavirajar. Show all posts

செளந்தர்யலஹரி 97 & 98


கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ

அம்பிகே!, ஆகம ரகஸ்யங்கள் தெரிந்தவர்கள் உன்னை பிரம்மனின் பத்னியான சரஸ்வதியென்றும், மஹாவிஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியென்றும், அத்ரி மஹரிஷியின் புத்ரியான பார்வதீயென்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் நீ இவர்களல்லாத துரீய ரூபமுடையவளும், வர்ணிக்க முடியாதவளும், அடையமுடியாத, எல்லையற்ற மஹிமையுடன் கூடியவளான மஹாமாயா ஸ்வரூபிணியாக, சர்வ ப்ரபஞ்சத்தையும் மோஹிக்கச் செய்து உலகனைத்தையும் ஆட்டுவிக்கிறாய்.

சரஸ்வதீ, லக்ஷ்மி, பார்வதீ என்னும் ரூபங்களைக் கடந்தவள் பராசக்தி. த்ரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரனைக் காட்டிலும் மேலானவரான சதாசிவனுடைய பத்னியாக இருந்துகொண்டு சுத்த வித்யையில் அடங்கிய மஹா மாயா ஸ்வரூபிணியாக ஸகல ப்ரபஞ்சங்களையும் வழிநடத்துகிறாள் என்கிறார் பகவத் பாதர். 'நிஸ்ஸீம மஹிமா' என்பதற்கு கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்டவள் என்று பொருள்.

த்ருஹிண க்ருஹிணிம் - பிரம்மாவின் பத்னி; கிரமாஹுர் தேவீம் = கிராம் தேவீம் - வாக்தேவியான சரஸ்வதி; ஹரே: பத்நீம் - விஷ்ணு பத்னியான லக்ஷ்மி; ஹரஸசரீம் அத்ரி தநயாம் - ருத்ரனுடைய பத்னியான பார்வதி; ஆகமவித: ஆகம ரஹஸ்யங்கள் அறிந்தவர்கள்; ஆஹு: - சொல்கிறார்கள்; த்வம் - நீ; துரீயா - இவர்களல்லாத; காபி - வர்ணிக்க இயலாத; துரதிகம நிஸ்ஸீம மஹிமா - அடையமுடியாத எல்லையற்ற மஹிமைகளுடன் கூடியவளாய்; மஹாமாயா - மஹா மாயா ஸ்வரூபிணியாக; விச்வம் ப்ரமயஸி - சர்வ லோகங்களையும் ஆட்டுவிக்கிறாய்.


கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

வேதியர்க ளயன்நாவில் விஞ்சைமக ளென்றும்
சீதரன்றன் மணிமார்பிற் செழுங்கமலை யென்றும்
நாதரிடத் தரிவையென்று நாட்டுவரெண் ணடங்க
ஆதிபரன் மூலபரை யாமளையுன் மயக்கால்.

********************************************************************************




கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜநஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயாகதா
தத்தே வாணீ முக-கமல-தாம்பூல ரஸதாம்

தாயே!, உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள். பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்?.

கொல்லூரில் பிறவி ஊமைக்கு பேசும் திறம் மட்டுமின்றி கவிதை பாடும் திறனையும் அம்பிகை தனது பாத தீர்த்தத்தால் அளித்ததாகவும், அதனையே ஆசார்யார் இங்கு குறிப்பிடுகிறார் என்று அருணா-மோதினியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்கள் கால்களில் செம்மையான குழம்பினை அழகிற்காக இட்டுக் கொள்வார்கள். அன்னையின் அக்குழம்பு கலந்த பாத தீர்த்தமானது தாம்பூல ரஸத்தை ஒத்து இருப்பதாகவும், அதனை பிரஸாதமாக ஏற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக ப்ரம்மஞானத்தை அடைய முடியும் என்பதையும் கூறி அது தனக்கு என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார் ஆசார்யார்.

கலிதா லக்தக ரஸம் - காலில் உள்ள செம்மை நிறத்தான அலங்காரம்; தவ சரண நிர்ணே ஜந ஜலம் - உனது பாதங்களை அலம்பிய நீரை; வித்யார்த்தீ - ப்ரஹ்மஞானத்தை/ப்ரஹ்ம வித்யயை அடைய விரும்பும் கதா காலே - எந்தக்காலத்தில்; பிபேயம் - சாப்பிடுவேன்; கதய தயை செய்து சொல்வாயா?; ப்ரக்ருத்யா - இயற்கையாக; மூகானாம் அபி - ஊமைக்குக் கூட; கவிதா காரணதயா - கவித்வத்தை அருளுவதால்; வாணீமுக கமல தாம்பூல ரஸதாம் - சரஸ்வதி தேவியின் வாயில் இருக்கும் தாம்பூல ரஸத்தின் தன்மை; கதா தத்தே - எப்போது அடைகிறதோ.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!


செய்ய பஞ்சுகு ழம்பெ ழும்புனல்
செல்வி நின்பத நல்கவே
துய்ய பங்கய வாணி தம்பல
ஊறல் துய்த்தசொல் வாணர்போல்
மையல் நெஞ்சுறு மூம ருங்கவி
வாண ராகிம லிந்ததால்
மெய்ய டங்கலு மூழ்கு முன்
கவி வீறு நாவில டங்குமோ.

செளந்தர்யலஹரி 95 & 96


புராராதே ரந்த்த:புரமஸி ததஸ் த்வச்சரண்யோ:
ஸபர்யா மர்யாதா தரளக்ரணாநாம் அஸுலபா
ததா ஹ்யேதே நீதா: சத மக முகாஸ் ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்தஸ்திதி-பிரணிமாத்யாபிரமா


அம்மா!, நீ த்ரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்ககூடியதில்லை. இதனால்தான் இந்திராதி தேவர்கள்கூட உன்னுடைய க்ருஹத்தின் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு அவர்களிருக்கும் வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத மனோரத சித்தியை பெறுகிறார்கள்.

அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள். இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும், அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசிக்கக் கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியிருக்கிறார் ஆசார்யார்.

த்வம் - நீ; புராராதே - த்ரிபுர சம்ஹாரியான பரமசிவனது; அந்த:புரம் அஸி - பட்டமகிஷியாக இருப்பது; அத: அக்காரணத்தால்; த்வச் சரணயோ - உன் பாதங்களுக்கு; ஸபர்யா மர்யாதா - பூஜை செய்வது; தரள கரணானாம் - சஞ்சலமான சித்தத்தை உடையவர்களுக்கு; அஸுலபா - சுலபமில்லை;ததா ஹி - ஆகவே; ஏதே சதமகமுகா: அமரா: - இந்திரன் முதலான தேவர்கள்; தவ - உனது; த்வாரோபாந்த ஸ்திதிபி: - வாசற்படியருகில் இருக்கும்; அணிமாத்யாபி: - அணிமா முதலிய அஷ்டசித்திகளுடன்; அதுலாம் ஸித்திம் - நிகரற்ற ஸித்தியை; நீதா: அடைய முடிகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

தேவியும் இல்லஞ் சிவனுறை அந்தப் புரமானால்
யாவ ருனைக்கண் டெய்துவ ரிமையோர் முதலானோர்
ஆவல்கொ டெய்த்துன் வாயிலில் அணிமா திகளாலே
மேவிய சித்திப் பேறோடு மீள்வா ரானாரே.
*******************************************************************************


களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸ்தீநாம் அசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரகதரோரப்யஸுலப:


சதிதேவி என்றழைக்கப்படும் பதிவிரதைகளின் தெய்வமே!, பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதா விலாசத்தால் அடைவதில்லையா?, சிறிதளவே செல்வத்தை கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட லக்ஷ்மி-பதி என்று கூறப்படுவதில்லையா?. பதிவிரதைகளில் முதன்மையானவளே!, உனது நகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்ததில்லயே!.

மஹா கவிஞர்கள் மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷ்த்தைப் பெற்றவர்களை 'சரஸ்வதி வல்லபர்கள்' என்றும், இதேபோல தன-தான்ய செல்வங்களை வசமாக்கிக் கொண்டிருப்பவர்களை 'லக்ஷ்மி-பதி' என்றும் கூறுவது வழக்கம். ஆனால் பார்வதீ பதி என்றோ, ஸதி-பதி என்றோ யாரையும் கூறுவதில்லை. வித்தையையும், செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்திக் கொண்டாலும், மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்த இயலாது. அவள் பரமசிவனுக்கே வசப்பட்டவள் என்று கூறுகிறார் லக்ஷ்மீதரர்.

குரவகதரோ: என்றால் மருதோன்றி (மருதாணி) மரம். முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டப்படவேண்டும் என்று 85 ஆம் ஸ்லோகத்தைல் இங்கே சொன்னது போல, மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம். ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யப்படுபது ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருவனே என்றுகூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறியிருக்கிறார் பகவத்பாதர்.

வைதாத்ரம் களத்ரம் - பிரம்மாவின் பத்னியாகிய சரஸ்வதி; கதிகதி கவய: எத்தனை கவிகள்; ந பஜ்ந்தே - அடையவில்லை; கோ வா - எவன் தான்; கைரபி தநை: - கொஞ்சம் செல்வம்; ச்ரியோ தேவ்யா: - லக்ஷ்மிதேவிக்கு; பதி: - புருஷனாக; ந பவதி - ஆகிறதில்லை; ஸதீநாம் அசரமே - பதிவிரதைகளுள் முதன்மையானவளே; மஹாதேவம் ஹித்வா - மஹா தேவரைத் தவிர;தவ - உன்னுடைய; குசாப்யாம் ஆஸங்க: ஆலிங்கனமானது; குரவகதரோ: அபி - குரவக வ்ருக்ஷத்திற்குக் கூட; அஸுலப: கிடைப்பதரிது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே

கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற் றவளே
மலைமகள் நீ கற்புடைய வனிதையெனப் பகருங்
குலமறைக ளெதிர்கொடுநின் குரவினையும் அணையா
முலைகுழையப் புணர்வதுநின் முதல்வரல திலையால்.

செளந்தர்யலஹரி 93 & 94



அராளா கேசேஷு ப்ரக்ருதி ஸரளா மந்த ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா


அம்பிகே!, பரமசிவனுடௌய மனதுக்கும் வாக்குக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்றழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய். கருணா சக்தியானது உனது கூந்தலில் சுருளாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும் மனதில் வாகைப் பூவைப் போல மிருதுத்தன்மையானதாகவும், நிகில்களில்கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினத்தைப் போன்ற கடுமையானதாகவும், இடையில் மிகுந்த மெலினமாகவும், மார்பும், நிதம்பமும் பருமனாகவும் விளங்குகிறது.

'காருண்ய விக்ரஹா' என்னும் த்ரிசதியில் வரும் நாமத்தை நினைவுபடுத்துவதாக இந்த ஸ்லோகம் இருக்கிறது.கருணாரஸத்தை அருணவர்ணமாகச் சொல்லுவது வழக்கம் என்றும், அந்த கருணையானது மூர்த்தியாக வந்திருப்பது போல சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் தேதியூரார்.

கேசேக்ஷு அராளா - கூந்தலில் சுருளாகவும்; மந்த ஹஸிதே - மந்தஹாசமான சிரிப்பில்; ப்ரக்ருதி ஸரளா - ஸ்வபாவமான ஸெளகுமார்யத்தோடும்; சித்தே - மனதில்; சிரீஷாபா - சிரீஷ குஸுமம் (வாகை மலர்)போல ம்ருதுவாகவும்; குசதடே - ஸ்தன ப்ரதேசத்தில்; த்ருஷதுபலசோபா - கருங்கல் போல கடினமாகவும்; மத்யே - மத்ய ப்ரதேசத்தில் (இடுப்பில்),ப்ருசம் தந்வீ - மிகவும் மெலிந்ததாகவும்; ரஸிஜாரோஹ - ஸ்தன ப்ரதேசத்திலும், நிதம்ப ப்ரதேசத்திலும்; ப்ருது: - பருத்ததாகவும்; அருணா - சரீரம் முழுவதும் சிவந்ததாகவுள்ள; சம்போ: - பரமேஸ்வரனுடைய; காசிக் கருணா - அழகுடைய கருணாமூர்த்தியான; ஜகத் த்ராதும் - லோகங்களைக் காப்பாற்றுவதற்காக; விஜயதே - வெற்றிகரமாக விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

ஒதியிருள் மூரலொளி உற்றகுழை வாக
மோதுமுலை யற்பஇடை முற்றுமு னிதம்பம்
ஆதிபர னின்னருள் திரண்டருண மாகு
மாதுநின்ம லர்ப்பதம னத்தெழுதி வைத்தேன்.

******************************************************************************



களங்க: கஸ்தூரி ரஜநிகரபிம்பம் ஜலமயம்
களாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்
அதஸ்த்வத் போகேந ப்ரதிதிநமிதம் ரிக்த குஹரம்
விதிர் பூயோபூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே

தாயே!, சந்த்ர மண்டலமானது களங்கமாகிற கஸ்தூரியுடனும், சந்த்ர பிம்பம் தோற்றுவிக்கும் கலைகள் பச்சைக்கருபூரப் பொடிகளோடு நிரம்பிய மரகதச் சிமிழாக இருக்கிறது. இப்படி உன்னுடைய ஸ்நானத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் சாமக்கிரியைகளை நீ தினமும் உபயோகம் செய்வதால் காலியாகும் இந்தச் சிமிழை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிரப்பி வைக்கிறார்.

கஸ்தூரி, பன்னீர், பச்சைக்கர்ப்பூரப்பொடி போன்றவை அம்பிகையின் ஸ்நான திரவியங்கள். இவைகளுடைய பெட்டியானது சந்திர மண்டலமாகவும், கஸ்தூரி கருப்பாகவும், பன்னீர் தளதளவென்றும், சந்திர கிரணங்கள் கர்பூரப்பொடிகளாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளன. சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும், மற்றொரு பக்ஷத்தில் வளர்ந்தும் வருவது அன்னையின் ஸ்நானத்திற்கான திரவியங்கள் குறைவதற்கும், பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறப்புவதற்கும் உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

களங்க: சந்திர மண்டலத்தில் அழுக்குப் போன்று களங்கம் தெரிவது; கஸ்தூரீ - கஸ்தூரீ திரவியம்; ரஜநிகர பிம்பம் - சந்திர பிம்பம் போல தோன்றுவது; ஜலமயம் - பன்னீர்; களாபி: - கலைகள்; கர்பூரை: - பச்சைக் கர்பூரப் பொடிகளோடும்; நிபிடிதம் - நிரம்பிய; மரகத கரண்டம் - மரகதத்தால் செய்யப்பட்ட சிமிழ்; அத: - அக்காரணத்தால்; ப்ரதிதினம் - தினமும்;த்வத் போகேந - உன்னுடைய உபயோகத்தால்; ரிக்த குஹரம் - காலியாகும் சிமிழை; விதி: - பிரம்மா; பூயோபூயோ: மீண்டும் மீண்டும்; தவ க்ருதே - உனக்காக; நிபிடயதி - நிரப்பி வைக்கின்றார்; நூநம் - நிஜமே.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

தூயமதி மரகதச்செப் பொளிர்கலையுங்
களங்கமுநேர் சொல்லுங் காலைக்
காயுமதி தவளகருப் பூரசக
லத்தொடுகத் தூரி போலும்
நீ அருந்த அருந்தவவை குறைதொறுமவ்
விரண்டும் அயன் நிறைத்தல் போலும்
தேயுமது வளருமது திங்களொளி
தோவுனது செல்வ மம்மே.

செளந்தர்யலஹரி 87 & 88


ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரெள
நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதெள
வரம் லக்ஷ்மீபாத்ரம் ச்ரியமதைஸ்ருஜந்தெள ஸமயீனாம்
ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரமிஹ கிம்


தாயே!, பனிமலையிலேயே இருக்கக்கூடியவையும், இரவு, பகல், ஸந்த்யாகாலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும், ஸமயாசாரமுடைய பக்தர்களுக்கு லக்ஷ்மியைக் கொடுக்கக்கூடியதுமான உனது பாதங்கள், பனியில் நாசமடைந்தும், இரவில் உறங்கியும், லக்ஷ்மி விரும்புகிற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜயித்து இருப்பதில் வியப்பில்லை.

அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி. தாமரைப்பூ அதிக பனியில் கருகிவிடுமாம். சூரியனது கதிர் கண்டே மலரக்கூடியது தாமரை. தாமரைப் பூவில் லக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்வர். லக்ஷ்மியும் எப்போதும் தாமரையில் இருப்பதில்லையாம், தனக்கு இஷ்டமிருக்கையில்மட்டுமே வந்து அமர்கிறாளாம். இவ்வாறாக இரவில் மலராதும், பனியில் கருகியும், எப்போதாவது மஹா-லக்ஷ்மி அமரும் தாமரைப் பூவைவிட, அன்னையின் பாதங்கள் சிறப்பாக பனிமலையிலும், ஒருநாளின் எல்லா காலங்களிலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தருவதுமான தாமரை என்று ஒப்பு நோக்கிக் கூறியிருக்கிறார்.

ஹிமகிரி - பனிமலை; நிவஸைக சதுரெள - இருப்பிடத்தில் ஸாமர்த்தியமாகவும்; நிசி - இரவில்; சரமபாகே ச - அடுத்த ஸந்த்யா காலங்களிலும், பகலிலும்; விசதெள - மலர்ந்திருப்பதும், ஸமயினாம் - ஸமயாசாரமுள்ள பக்தர்களுக்கு; ச்ரியம் - லக்ஷ்மிகரத்தை; அதி ஸ்ருஜந்தெள - உண்டாக்குகிற; த்வத் பாதெள - உன் பாதங்கள்; ஹிமாநி ஹந்தவ்யம் - பனியில் நாசமாகிற; நிசாயாம் - இரவில்; நித்ராணாம் - உறங்குகின்ற; வரம் லக்ஷ்மி பாத்ரம் - லக்ஷ்மிக்கு விருப்பமான இடமான; ஸரோஜம் - தாமரைப் புஷ்பத்தை; ஜயத: - ஜயிக்கின்றது; இஹ சித்ரம் கிம் - ஆச்சர்யமென்ன?.

கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!

இமநெ டுங்கிரி உலவி யுங்கவின்
எழுநி ரந்தர மலருமேல்
அமர்பெ ருந்திரு அருளு நின்பத
அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலை யின்திரு மனையெ னும்பெயர்
விளவ தொன்றல முதல்வியே.
*********************************************************************************

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபதம் அபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிநகமடீ கர்பர துலாம்
கதம் வா பாஹுப்யாம் உபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா

தாயே!, கீர்த்தி/புகழுக்கு உரியதாகவும், ஆபத்துக்கள் அணுகமுடியாததாகவுமுள்ள உனது பாதங்களை, கடினமான ஆமையின் முதுகு ஓட்டிற்கு ஸமமானதாக கவிஞர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ?. பரம-தயவுடைய சிவனுக்கு உன்னுடனான விவாஹ காலத்தில் அதி-மிருதுவான உனது பாதங்களைகளை எடுத்து பாராங்கல்லான அம்மியில் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ?.

அம்பிகையின் பாதங்கள் பக்தர்களுக்கு புகழையும் அளித்து அவர்களுக்கு ஏற்படும் சகலவிதமான ஆபத்துக்களையும் போக்கவல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில், 'கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபாதன் விதா' என்று அம்பிகையின் அழகிய வளைந்த பாதங்களை ஆமையின் மேலிருக்கும் ஓட்டுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதைச் சொல்கிறார். கல்யாணங்களில் சப்தபதியின் போது பெண்ணின் பாதத்தை தனது கைகளால் எடுத்து அம்மியின் மேல் வைத்து மந்திரங்கள் உச்சரிப்பர். அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ என்று கேட்பதன் மூலமாக அன்னையின் பாதங்களது மென்மையை சிறப்பாகக் கூறுகிறார் ஆசார்யார்.

தேவி - அம்மா; கீர்த்தானாம் பதம் - கீர்த்திக்கு இடமான; விபதாம் அபதம் - ஆபத்துக்களுக்கு இடமில்லாத; தே - உன்; ப்ரபதம் - பாதத்தின் முன்பகுதி; ஸத்பி: - ஸாதுக்களால்/கவிஞர்களால்; கடின - கடினமான; கமடீகர்பர துலாம் - ஆமையின் மேல் இருக்கும் ஓடு; கதம் நீதம் - ஸமமாக எப்படிச் சொல்லப்பட்டது; தயமாநேந மநஸா - தயவோடு கூடிய மனசுள்ள;புரபிதா - பரமசிவனால்; உபயமநகாலே - உன்னுடைய விவாஹ/திருமண காலத்தில்; யத் - எந்தப் பாதங்களை; பஹுப்யாம் ஆதாய - கைகளால் எடுத்து; த்ருஷதி - அம்மியில்; கதம் வா ந்யஸ்தம் - எப்படித்தான் வைத்தாரோ?.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பஞ்ச ழுத்தினும் வாடு நின்பத
பங்க யத்தினை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வம்பு றக்கம
டத்தை வீணில் வியப்பராம்
அஞ்ச னப்புயல் தங்கெ நின்வரர்
அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்ச கக்கொடு நெஞ்ச ரத்தனை
வல்ல ரல்லர் நினைக்கினே.

செளந்தர்யலஹரி 83 & 84


பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே
நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ
நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:

அம்மா!, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.

மன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், "இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.

கிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி
ஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்
செம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி
சேர்த்தன்றோ சிவன்பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத் தளித்தனையின் றன்று போல
ஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ
வம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்
மனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே

*********************************************************************************




ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:

தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக.

அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.

மாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

உளமகிழ் மகிழ்நர் சென்னி
உறுநதி விளக்க மாயோன்
கிளர்முடிப் பதும ராகத்
கேழொளி செம்பஞ் சேய்க்கும்
முளரிநின் பதங்கள் வேத
முடியுறப் பதித்த தவ்வாறு
எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.

செளந்தர்யலஹரி 81 & 82



குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச


தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.


பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

கொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்
குலமலைப் பக்க மெனவாழ்
அத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்
அடையவுன்நி தம்ப விடையே
எத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை
இதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற
வருத்தவோ மதுர அமுதே.


******************************************************************************



கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி


அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.

அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.

பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!

பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்
புழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து
மணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே
நிற்கடின கோபமம ராமை கண்டோ
நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்
பிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.
பெற்றதிது என்னுமிந்தப் பெருமை கண்டோ.

செளந்தர்யலஹரி 77 & 78

யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்


மங்கள ஸ்வரூபியே! அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.

காளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.

சிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

முளரி மாதுன் முலையி னோடு
முலைநெ ருக்க இடையில்வான்
வெளியில் நீல மோடி யுந்தி
வியன்மு ழைக்குள் நுழையவெ
தெளியு நீரில் யமுனை நீவு
சிறுத ரங்க மனையபெ
ரொளியின் ஞால மருளு மீது
ரோம ரேகை யென்னவெ
---------------------------------------------------------------------------------------------

ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா
கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே

மலையரசன் பெண்ணே!, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா? இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா?, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா?, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது.

நாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது "நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.

நாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.

கிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.

கவிராஜரது மொழிபெயர்ப்பு:

தூய கங்கை நிலைப டைத்த
சுழித னத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆல வாலம் விரகவேள்
தீய ரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்க ணிடைவிடா
மேய கஞ்ச மடுவி னுந்தி
வேறு ரைத்தென் விமலையே.

செளந்தர்யலஹரி 75 & 76



தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!.

பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன்.

தரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெருகுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

தருண மங்கலை உனது சிந்தை
தழைந்த பாலமு தூறினால்
அருண கொங்கையி லதுபெ ருங்கவி
அலைநெ டுங்கட லாகுமே
வருன நன்குறு கவுணி யன்சிறு
மதலை அம்புயல் பருகியே
பொருள்ந யம்பெறு கவிதை யென்றொரு
புனித மாரிபொ ழிந்ததே.

--------------------------------------------------------------------------------------------

ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா
ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி

பார்வதி!, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.

உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.

அசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள்.

கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:

மூல மேநின் மகிழ்நர் கோப
முதுக னற்பொ ருதுவேள்
கோல நாபி மடுவி னிற்கு
எரிப்ப வந்த வெம்மையான்
மேல வாவு தூம ரேகை
வேரே ழுங்கொ ழுந்தையோ
நீல ரோம ரேகை யென்று
நீள்நி லங்கு றிப்பதே.